ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...


 


பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும், பார்வை திறனும் கிடைப்பதில்லை. வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே....


• கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும், தவிர்த்து விடுங்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது, டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம். அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்.


• கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால், வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது. கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும் போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.


• பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.


• இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள், முகப்பு விளக்குகள், பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


• முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.


• ""மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம், ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும்.""


• முன்னால் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள். மேலும், வாகனத்தை பின்தொடரும் போதும், எதிரில் வாகனம் வரும் போதும் முகப்பு விளக்கை "டிம்" செய்து ஓட்டுங்கள்.


• தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள். குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ, காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை "ரிலாக்ஸ்" செய்து கொள்ளுங்கள்.


• எதிரில் அதிக வெளிச்சத்துடனும், அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால், வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.


* நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால், பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு, குட்டி தூக்கம் போடுங்கள். அதன்பின், முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.


• எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும், முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு "ஓவர்டேக்" செய்ய வேண்டாம். இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம். இதுபோன்று "ஓவர்டேக்" செய்வதால் தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.


காரில் இரவு பயணம் செல்லும் போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை...
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக