சவூதி நாட்டு இளவரசரான சவூதி இளவரசர் அல்வாலிட் பின் டல்பால் பின் அப்துல் அசிஸ் அல் சவுத், மற்றும் அவரது முதலீட்டு நிறுவனமும் இணைந்து டுவிட்டரில் சமூக வலையமைப்பில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளது.
வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நம்பிக்கைக்குரியதும் உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தியுள்ளதுமான ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்வதாக இளவரசர் அல்வாலிட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் அண்மையில் இடம்பெற்ற புரட்சிகளின் போது தகவல் பரிமாற்றத்தில் டுவிட்டர் முக்கிய பங்குவகித்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக