ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்ச்சைக்குரிய சவூதி இளவரசர் ருவிட்டரில் 300 M US$ முதலீடு


சவூதி நாட்டு இளவரசரான சவூதி இளவரசர் அல்வாலிட் பின் டல்பால் பின் அப்துல் அசிஸ் அல் சவுத், மற்றும் அவரது முதலீட்டு நிறுவனமும் இணைந்து டுவிட்டரில் சமூக வலையமைப்பில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளது.

வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நம்பிக்கைக்குரியதும் உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தியுள்ளதுமான ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்வதாக இளவரசர் அல்வாலிட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் அண்மையில் இடம்பெற்ற புரட்சிகளின் போது தகவல் பரிமாற்றத்தில் டுவிட்டர் முக்கிய பங்குவகித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக