ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்சல் குருவுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி நாளை காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்

ஸ்ரீநகர்: நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று கோரி நாளை ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி தமிழகத்தில் மக்கள் போராட்டம் வெடித்தது. பல்வேறு தமிழ் ஆர்வலர்கள், அமைப்புகள், கட்சிகள் தீவிரப் போராட்டத்தில் குதித்தன. உச்சகட்டமாக காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற பெண் தீக்குளித்து உயிர் நீத்தார்.

இதையடுத்து மூன்று பேரின் தூக்குத் தண்டனையைக் குறைத்து கருணை காட்ட வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையி்ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக