ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

4 வருடங்களாக உலகின் நம்பர் 1 உசேன் போல்ட். சொந்த நாட்டில் இருந்தே இன்னொரு புயல் யோகன் பிளாக்கால் பின்னுக்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி (வீடியோ இணைப்பு)


ஜமைக்காவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் நம்பர் 1 உலக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டை பின்னுக்கு தள்ளி யோஷன் பிளாக் முதலிடம் பிடித்தார்.
ஜமைக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலகின் மிகச் சிறந்த வீரரான உசைன் போல்டை யோஹன் பிளேக் என்ற வீர்ர் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 மீட்டர்களை 9.75 நொடிகளில் கடந்து யோஹன் பிளேக் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். உசைன் போல்ட் 9.86 நொடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை பிடித்த அசபா பாவெல் 9.88 நொடிகளில் கடந்துள்ளார். இவர்கள் மூவரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தோல்விக்கு பிறகு கருத்து தெரிவித்த உசேன் போல்ட்:,” ஒலிம்பிக் போட்டியில் தனக்கு மிகப்பெரிய போட்டியாளனாக பிளாக் உறுவாகியிருக்கிறார். அவரையும் வீழ்த்தி முதலிடம் பிடிக்க கடுமையாக பயிற்சி மேற்கொள்ள போகிறேன் ” என்று கூறியுள்ளார்.
கடந்த 4 வருடங்களாக ஓட்டப்பந்தயத்தில் நம்பர் 1-ஆக வலம் வந்தவர் உசேன் போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
- NALEEM HASSIM-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக