ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
         

இளம்பெண்ணுக்கு செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரத்தில் அக்டோபர் 22ம் தேதி கேரள அமைச்சர் பி.ஜே. ஜோசப்பை நேரில் ஆஜராகும்படி தொடுபுழா நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.



கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ஜெய்மோன். இவருடைய மனைவி சுரபி. இவருடைய செல்போனுக்கு கேரள நீர்பாசன துறை அமைச்சர் பி.ஜே ஜோசப்பின் செல்போனில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ்கள் வந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக தொடுபுழா குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுரபி புகார் செய்தார்.  இதையடுத்து, பி.ஜி ஜோசப் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நீதிமன்றம், விசாரணைக்கு அக்டோபர் 22ம் தேதி நேரில் ஆஜராகும்படி ஜோசப்புக்கு உத்தர விட்டுள்ளது.

கடந்த இடது முன்னணி அரசிலும் ஜோசப் அமைச்சராக இருந்தார். அப்போது, விமானத்தில்  லட்சுமி கோபகுமார் என்ற நடிகையிடம் சில்மிஷம் செய்ததாக புகார் கூறப்பட்டதால் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது மீண்டும் இளம்பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரத்தில் சிக்கி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக