ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

திமுகவில் சேர்ந்த பிறகு முதல்முறையாக கைதாகும் நடிகை குஷ்பு!



kushboo
 சென்னை: திமுகவில் சேர்ந்த பிறகு முதல் முறையாக போராட்டத்தில் இறங்கி, கைதாகியுள்ளார் நடிகை குஷ்பு.
ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர் நடிகை குஷ்பு. ஜெயா டிவியின் ஜாக்பாட் ஷோவில் நிரந்தர தொகுப்பாளராக இருந்தார். அதிமுகவில் சேருவார் என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென திமுகவில் ஐக்கியமானார் குஷ்பு.

கட்சியில் அவருக்கு தனி பதவி எதுவும் தரப்படாவிட்டாலும், தொடர்ந்து திமுக மேடைகளில் குஷ்புவுக்கு பிரதான இடம் தரப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம், திமுக கூட்டங்களில் குஷ்புவுக்கு தனி மரியாதைதான்.

திமுக தேர்தலில் தோல்வியடைந்ததும், கட்சியில் எல்லோரையும் விட துணிச்சலாக கருத்து சொன்னவர் குஷ்புதான்.

'இந்த தோல்வியைத் தந்ததற்காக மக்கள்தான் வருந்தப் போகிறார்கள். எங்களுக்கு ஒன்றுமில்லை,' என்று கூறினார்.

இந்தநிலையில், இப்போது திமுகவினர் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு, கைது செய்து வருகிறது ஜெயலலிதா அரசு. இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தினர். அதிமுக அரசு இந்த போராட்டத்துக்கு தடை விதித்த நிலையில், அந்த தடையை மீறி நடந்த போராட்டத்தில் முக ஸ்டாலின் உள்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.

வட சென்னையில் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குஷ்பு, அதிமுக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினார். பொய் வழக்கு போடும் ஜெயலலிதாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

பின்னர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுடன் அவரும் கைதானார்.

இதன் மூலம் திமுகவுக்காக முதல் முறையாக சிறை சென்றுள்ளார் குஷ்பு.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக