ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்கிறார் ரோசய்யா



Cricket Scores
    Upcoming Matches
Eng V Ind
Only Twenty20
Wed 31st Aug
SL V Aus
1st Test
Wed 31st Aug
Zim V Pak
Only Test
Thu 1st Sepங்கள்
Rosaiah

முன்னாள் ஆந்திர முதல்வர் ரோசய்யாவை தமிழக ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவு பிறப்பித்தார். எஸ்.எஸ்.பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து புதிய ஆளுநராக ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.


அவர் வரும் 31-ம் தேதி மாலை 4. 22 மணி அளவில் தமிழக ஆளுநராக பதவியேற்கிறார். இதற்காக அவர் புதன்கிழமை காலை விமானம் மூலம் சென்னை வருகிறார்.

ரோசய்யா கடந்த 1968-ம் ஆண்டு ஆந்திர சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பலமுறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு முறை லோக் சபாவுக்கும் தேர்வானார். அவர் பல முதல்வர்கள் அமைச்சரவைகளில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.

ஆந்திர மாநில பட்ஜெட்டை 16 முறை தாக்கல் செய்துள்ள பெருமை அவருக்கு மட்டும் தான் உள்ளது. இந்திய அரசியலிலேயே இதுவரை யாரும் 16 முறை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்ததில்லை. கடந்த 2007-ம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து பெருமைபடுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக