அந்த பஸ் ஒரு மலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. குழந்தைகள் ஆடி பாடியபடி மகிழ்ச்சியுடன் இருந்தனர். அப்போது மழை பெய்ததால் மேகமூட்டமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து நிலை தடுமாறிய பஸ் ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. பின்னர் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. அதில் 53 குழந்தைகள் அதே இடத்தில் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக