ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தாலி செய்ய தங்கம் மற்றும் ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா



திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் ஓய்வூதிய திட்டத்தை இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
ஏழை எளிய மக்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டம்  இன்று தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போது ஏழு ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய, நான்கு கிராம் தங்க நாணயம் வழங்கினார்.

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 500 ரூபாய் மாத ஓய்வூதியத்தை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போது ஏழு பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக