ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் வெற்றி

Vijayakanth beats candidate
]
'என்னிடம் அடிவாங்கியவன் மகாராஜனாகிவிடுவான்...,' தர்மபுரி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரை பிரச்சாரத்தின்போது 'அடித்த' பிறகு விஜயகாந்த் சொன்னது இது.
அவர் அன்று சொன்னது காமெடியாகப் பார்க்கப்பட்டது. இன்று கிட்டத்தட்ட அது நிஜமாகவே ஆகிவிட்டது.

தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரம் செய்த விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளர் பெயரை தவறுதலாக பாண்டியன் என்று கூறிவிட்டார். உடனே அருகில் இருந்த வேட்பாளர் தன் பெயர் பாஸ்கர் என்று கூற, வேனிலேயே அவரை ஓங்கி அடித்தார். இதை பெரிய அளவில் பிரச்சாரமாக்கி விஜயகாந்தை கிண்டலடித்தார் வடிவேலு.

பின்னர், தான் அடித்ததை நியாயப்படுத்திய விஜயகாந்த், "என் ஆளைத்தானே அடிச்சேன். இதில் மற்றவர்களுக்கென்ன... என்கிட்ட அடிவாங்கினவன் மகாராஜனாகிவிடுவான்", என்றார்.

இப்போது அந்த வேட்பாளருக்கு மகாராஜனாகும் யோகம் வந்துவிட்டது. தர்மபுரி தொகுதியில் 4500 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் பாஸ்கர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக