சவூதி கலாச்சார அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்புத்தகச் சந்தையில் கருத்தரங்குகளும், கலாச்சார அமர்வுகளும், இலக்கிய மாலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எழுத்தாளர்களுடன் வாசகர்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.
இடைவேளையின்றி, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இப் புத்தகச் சந்தை திறந்திருக்கும் என்றும், நாளாந்தம் 35,000 க்கும் மேற்பட்ட மக்கள் வருகை எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சகப் பிரதிநிதி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
"விஞ்ஞானம், புனைவுகள், தொழிற்நுட்பம், சட்டம், சிறுவர் இலக்கியம் என்று பல துறைகளின் நூல்கள் குவிந்துள்ளன" என்றார் அவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக