ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து திமுக அமைச்சர்கள் விலகல்


Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update


சென்னை. மார்ச் 6: திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் கூடியது. முதல்வர் கருணாநிதி தலைமையில் மாலை 5.45 முதல் 7.15 வரை நடந்த இந்த கூட்டத்தில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து திமுக அமைச்சர்கள் விலகுவதாக முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய திருநாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, மதச்சார்பற்ற தன்மை இவற்றை கட்டிகாக்கும் வகையில் செயல்பட்டு வரும் திமுக, இந்த கொள்கைகளின் அடிப்படையில்தான் எந்தவொரு கட்சியுடனும் அணி சேர்ந்து பாடுபட்டு பணியாற்றி வருகிறது.
 இந்த நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவும் மாறாமல் கடந்த 7 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடனும், மற்ற தோழமை கட்சிகளுடனும் நல்லுறவு கொண்டு நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் நற்பணி ஆற்றி வருவதோடு, ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தல்களிலும் அணி சேர்ந்தே போட்டியிடும் கட்சிகளில் ஒன்றாக திமுக இயங்கி வருவது நாடறிந்த உண்மை.
அந்த வகையில் 2011 ஏப்ரலில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் புதுவிதமான சில பிரச்னைகள் உருவாக்கப்பட காங்கிரஸ் கட்சி காரணமாகியது என்பது தான் திமுகவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டியுமான சோனியா காந்தியை ஒவ்வொரு தேர்தலின்போதும் நான் சந்தித்து கருத்து பரிமாறிக் கொள்வதுண்டு. அதேபோல இந்த தேர்தலை முன்னிட்டு என் உடல்நிலையைக்கூட பொருட்படுத்தாமல் டெல்லிக்கு சென்று 2 நாள் தங்கியிருந்து சந்தித்து உரையாடிய போது, அவர்கள் விரும்பியவாறு முதலில் திமுக & காங்கிரஸ் பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானித்தது.  காங்கிரஸ் £ர்பில் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த வருவதற்கு காலதாமதம் ஆகிய நிலையில் திமுக, பாமக மற்ற கட்சிகளுடன் பேச்சு தொடங்கியது. மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி, அதுவரை இறுதி முடிவாக எத்தனை தொகுதிகள், எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி தீர்மானிக்காமல் இருந்து, அதன்பிறகே சென்னையில் 20.2.2011 அன்று காங்கிரஸ் கட்சியின் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காங்கிரஸ் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவிதமான முடிவும் எய்த பெறாத நிலையில் இறுதி முடிவெடுக்க காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். அவர் முன்னிலையிலே நான் நடத்திய பேச்சுவார்த்தையின் போது 57 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்வதென ஒப்புதல் கொடுத்தோம்.
  அதுபற்றி டெல்லி சென்று மேலிடத்தை கலந்துகொண்டு உடனடியாக அறிவிப்பதாக குலாம்நபி ஆசாத் கூறிச் சென்றார். பின்னர் டெல்லியில் இருந்து பேசிய குலாம்நபி ஆசாத் 60 தொகுதிகள் தேவை என்றும், அப்போதுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றும் அறிவித்தார். அதைத்தொடர்ந்து திமுக சார்பில் 60 தொகுதிகள் அளிக்கவும் ஒப்புக்கொண்டு, சென்னைக்கு வந்து கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்யலாம் என்று நான் கேட்டுக்கொண்டேன்.
ஒப்பந்ததத்தில் கையெழுத்திட வருவார்கள் என்று எண்ணியிருந்த நிலையில், அங்கிருந்து தொலைபேசியில் 60 இடங்கள் போதாது, 63 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அந்த தொகுதிகள் அவர்களால்தான் நிர்ணயம் செய்யப்படும் என்றும், எத்தனை இடங்கள் என்றும் ஒப்பந்தம் செய்யும்போதே எந்தெந்த தொகுதிகள் என்றும் குறிப்பிட வேண்டும் என்று நிபந்தனைகள் கூறப்பட்டன.
சட்டமன்ற தேர்தல் ஆனாலும், நாடாளுமன்ற தேர்தல் ஆனாலும் இதுவரையில் நடைபெற்ற எந்த ஒரு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் இப்படியொரு நிலையை நானோ, திமுக தலைமையோ சந்தித்தது இல்லை. அதை காணும்பொழுது முதலில் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 48ல் தொடங்கி 51 என்றாகி, 53 என்றாகி, 55 என்றாகி, 57 என்றாகி இறுதியில் 60 தொகுதிகளுக்கு ஒப்புதல் அளித்து, அதன்பிறகே இதுபோன்ற நிபந்தனைகள் 63 தொகுதிகள் வேண்டும் என்பதும், அந்தந்த தொகுதிகளின் பெயர்களை பரஸ்பரம் இரண்டு கட்சிகளும் கலந்து பேசி முடிவு செய்யாமல், அவர்கள் நிச்சயித்ததையே ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது. அதை கண்டுதான் நானோ, பேராசிரியரோ மாத்திரம் முடிவெடுத்து அறிவிப்பதாக இருத்தல் ஆகாது என்று கருதி உயர்நிலை செயல்திட்டக்குழுவில் விவாதித்து முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது,
 தேர்தல் உடன்பாட்டுக்காக தொடக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளையும், உருவாக்கப்பட்ட பிரச்னைகளையும் பார்க்கும்போது இரு கட்சிகளின் முன்னணி செயல்வீரர்களும், தொண்டர்களும் மன வேறுபாடின்றி நேச மனப்பான்மையோடு பணியாற்றும் நிலைக்கு குந்தகம் ஏற்படுத்தி, தேர்தல் முடிவை பாதிப்பதற்கு இதுபோன்ற பிரச்னைகள், செயல்பாடுகள், இழுத்தடிப்புகள் காரணமாகி விடக்கூடும். அதற்காக மட்டுமல்லாமல் காங்கிரசின் போக்கு தேர்தல் உடன்பாட்டை சுமூகமாக செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு பதிலாக, இதையே சாக்காக வைத்து திமுகவை அணியில் இருந்தே அகன்று விடச்செய்வதற்கான காரியமோ என்று ஐயுற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

எனவே, இந்த உயர்நிலை செயல் திட்டக்குழுவில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு உள்ளாகி இருக்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.இந்த கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளர் நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதிமாறன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி, கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, சுபதங்கவேலன். நேரு, ஐ,பெரியசாமி, மற்றும் சற்குண பாண்டியன், எம்.பி.க்கள். டி,ஆர்.பாலு டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி,  மற்றும் கே.வி.கல்யாணசுந்தரம், ஏ.எல்.சுப்பிரமணியம், நாகநாதன், மு.கண்ணப்பன், முத்துசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், குப்புசாமி, செ.மாதவன், வி.எம்.ஷா, கோவை ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக