ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்வி ஜெயலலிதாவை ஆபாசப் பொம்மைபோல வரைந்து சிங்களவர்கள் ஆர்பாட்டம் !


இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (06) கொழும்பு புறக் கோட்டை பகுதியிலுள்ள கடைகள் சில, மூடப்பட்டது. பின்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு ஊர்வலமாகச் சென்று அங்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழ் நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் படத்தை ஆபாசமாக வரைந்து(அவர் ஜாக்கெட்டோடு மட்டும் நிற்பதுபோல) அதனை இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக கொண்டு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சிங்களவர்கள். இதேவேளை இவர்கள் இந்திய வம்சாவெளி வியாபாரிகளையும் மிரட்டி இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளச் செய்துள்ளனர். நேற்றைய தினம் விமல் வீரவம்ச தெரிவித்த கருத்துக்களும் , தமிழ் வியாபாரிகளைக் குறிவைத்து வெளியிடப்பட்டதாககும். 


நாங்கள் திருப்பி அடித்தால் அவர்கள் தாங்கமாட்டார்கள் என்று விமல் வீரவம்ச குறிப்பிட்டிருந்தது, இந்திய வம்சாவெளி வியாபாரிகளைத் தான். இதன் காரணமாகவே சில தமிழர்களும் இன்றைய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என மேலும் அறியப்படுகிறது. இலங்கை இராணுவம் போரின் போது பல தமிழ் பெண்களை மானபந்தப் படுத்தியது. போர் மரபுகளை மீறி இறந்த பெண் போராளிகளின் ஆடைகளை உருவி அவர்களை அவமானப்படுத்தியது. இதே பாணியில் இன்று சிங்களவர்களும், செல்வி ஜெயலலிதாவின் படத்தை ஆபாசமாக வரைந்து அதனை, தூக்கிக் காட்டி, ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். இது கண்டிக்கப்படவேண்டிய விடையம் ஆகும். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக