ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிராமணரின் எச்சில் மேல் உருண்டு புரளும் தலித்துகள்!

பிராமணரின் எச்சில் மேல் உருண்டு புரளும் தலித்துகள்!

இந்தியாவில் இன்றும் தலை விரித்து ஆடுகின்ற சாதிக் கொடுமையின் ஒரு வடிவத்தை காட்டக் கூடிய பதிவு இது. 

கர்நாடகாவில் கடந்த பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக இச்சடங்கு இடம்பெற்று வருகின்றது. 

இதை ஒரு சடங்கு என்று சொல்கின்றமைக்கு பதிலாக விசித்திர நடைமுறை என்றும் சொல்லலாம். 



உயர் சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுவோர் சாப்பிட்ட மிச்ச சொச்ச உணவு, உமிழ் நீர் ஆகியவற்றின் மேல் தாழ் சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுவோர் உருண்டு புரள்கின்றனர், இதன் மூலம் தாழ் சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பாவங்கள் நீங்கள் பெற்று நிறைவான வாழ்க்கை பெறுவார்கள் என்று நம்ப வைக்கப்பட்டு உள்ளது. 

மங்களூரில் உள்ள 4000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குக்கே சுப்பிரமணிய கோவிலில் வருடாந்த நிகழ்வாக இது இடம்பெற்று வருகின்றது. 

அத்துடன் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்திலும் இது இடம்பெற்று வருகின்றது. வழக்கமாக இது கந்தசஷ்டி காலத்தில் இடம்பெறும். 

கடந்த முறை இது இடம்பெற்ற பிராமணர்களின் எச்சில் சாப்பாட்டு மிச்சங்கள் மீது தலித்துக்கள் 25000 பேர் உருண்டு புரண்டார்கள். 

இம்முறையை சட்டத்தின் உதவியுடன் இல்லாது ஒழிக்க முற்போக்குவாதிகள் முயல்கின்றனர். ஆயினும் இதற்கு தலித்துக்கள் சம்மதிக்கின்றார்கள் இல்லை என்று சொல்லப்படுகின்றது.

 

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக