ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நோர்வே ஏர்போட்டில் திருடி மாட்டிக்கொண்ட பயணி !


கடையில் திருடுவார்கள், ரோட்டில், பஸ்சில் எல்லாம் திருடுவார்கள். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம். விமானநிலையத்திலும் திருட்டுகள் நடந்துள்ளது. ஆனால் விமானநிலையத்தில் பயணிகள் பரிசோதனை நிலையத்தில் எவராவது திருடுவார்களா ? எந்தப் பக்கம் பார்த்தாலும் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் எவராவது திருடுவார்களா ? ஆனால் இந்தக் காணொளியைப் பாருங்கள். பயணிகள் பரிசோதனை நடந்தபின்னர், பயணி ஒருவர் தனது விலை உயர்ந்த மணிக்கூட்டையும் தங்கச் சங்கிலியையும் மறந்துபோய் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். பின்னால் வந்த நபர் தனது பொருட்களை எடுத்தது பத்தாமல், அதனையும் களவெடுத்துள்ளார். 


சிறிது நேரத்தில், தனது கைக்கடிகாரத்தைக் காணவில்லை என்று உணர்ந்த பெண் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விடையத்தைத் தெரிவிக்க, அவர்கள் CCTV கமாராக்கள் மூலம் திருடனை துல்லியமாக அறிந்து அவர் விமானத்தில் ஏற முன்னரே அவரைக் கைதுசெய்துள்ளனர். இது நோர்வேயில் நடந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக