ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உப்பினால் உலகில் மிகப் பெரிய ஓவியம் படைத்த பெண்:


கல் உப்பை பயன்படுத்தி 84 சதுர மீட்டர் பரப்பளவில் 7 வண்ணங்களில் மிகப் பெரிய ஓவியம் தீட்டி இந்தியாவில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சரிதா சதீஷ் சாதனை படைத்துள்ளார்.
உலக வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட இந்த ஓவியம் எலைட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.

வேலூரை சேர்ந்த இவர் படிக்கும் போதே ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றவர்.
7 மீற்றர் அகலமும், 12 மீற்றர் உயரமும் கொண்ட 84 சதுர மீற்றர் பரப்பளவில் 9 மணி நேரத்தில் மிகப் பெரிய ஓவியம் வரைவதற்கு கோவையில் உள்ள எலைட் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார்.

3 மணி நேரத்துக்கு 15 நிமிடம் ஓய்வு என்ற நிபந்தனையுடன் இரு முறை மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் 8 மணி 15 நிமிடங்களில் தனது சாதனையை நிறைவு செய்தார்.
இதையடுத்து எலைட் உலக சாதனையில் உப்பினால் உலகில் மிகப் பெரிய ஓவியம் படைத்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Thanks to Tamilspy.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக