கடந்த 2009ஆம் ஆண்டு ஓசியன் லேடி கப்பல் மூலம் கனடாவின் விக்டோரியா பகுதியைச் சென்றடைந்த 76 இலங்கையர்களின் பராமரிப்பு செலவீனங்கள் தொடர்பிலும் இந்த செலவறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் வரக்கூடிய சட்டவிரோத அகதிகளை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலும் இந்த நிதிகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஒன்பது நாடுகளில் நிறுவப்படவுள்ள 16 புலனாய்வுத் தளங்கள், 40 நாடுகளில் உள்ள 67 எல்லைக் கட்டுப்பாட்டுத் திணைக்களங்களுடன் இணைந்து செயற்படும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறான வேலைத்திட்டங்கள் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் முன்மொழியப்பட்டன. எனினும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
இதன் விளைவாகவே, ஓசியன் லேடி மற்றும் சன் சீ கப்பல் என்பன கனடாவை சென்றடைவதை தடுக்க முடியாதிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக