இதையொட்டி, விபத்து நடந்த பள்ளி முன்பு பலியான குழந்தைகளின் படங்களுடன் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களும் பொதுமக்களும் மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, அன்பழகன் எம்எல்ஏ, நகராட்சி தலைவர் தமிழழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பெற்றோர்கள், தங்கள் வீடுகளில் குழந்தைகளின் படங்களை வைத்து படையலிட்டு அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் பாலக்கரையில் எழுப்பப்பட்டுள்ள தீ விபத்து நினைவு மண்டபத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன் இருந்து அகல் தீபம் ஏந்தி ஊர்வலமாக சென்று மகாமக குளத்தில் மோட்சதீபம் ஏற்றுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக