ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

ஆன்மாவே!
இன்று தாய் தந்தையை பேணிக்காப்பது பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

23: என்னைத்தவிர யாரையும் வணங்காதீர்கள்!
பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறிவிடாதே! அவ்விருவரையும் விரட்டாதே!
மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு.

24: அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காவும் தாழ்த்துவீராக!
“சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்ததுப்போல் இறைவா!
இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக! என்று கேட்பீராக!

25: உங்கள் உள்ளங்களில் உள்ளதை உங்கள் இறைவன் நன்கறிபவன். நீங்கள்
நல்லோராக இருந்தால் அவன் திருந்துவோரை மன்னிப்பவனாக இருக்கிறான்.
[அல்குர்ஆன் பாகம்:15- 17.பனூ இஸ்ராயீல்]

ஒருமனிதர் தாய் தந்தையரை அழுது கொண்டிருக்குமாறு விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்வதாக வாக்குப்பிரமாணம் அளித்திட அண்ணல் நபி[ஸல்] அவர்களிடம் வந்திருந்தார். அப்போது நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்:
தாய் தந்தையரிடம் திரும்பிச்சென்று எவ்வாறு அழச்செய்துவிட்டு வந்தாயோ
அவ்வாறு சிரிக்கச்செய்துவிட்டு வா!” என்றார்கள்.

[அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் [ரலி] ஆதாரம்: அல் அதபுல் முஃப்ரத்]

ஆன்மாவே!
இறைவன் இப்புவியை படைத்து அதில் மனிதர்களையும் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் படைத்துள்ளான். அதில் தாய் தந்தையென்ற உயரிய ஸ்தானத்தையும் கொடுத்து நம்முடைய இப்பிறப்பு இந்த இருவர்கள் மூலம்தான் இவர்களின் மூலமே இவ்வுலக வாழ்க்கையைக்காணவேண்டும் என்ற நிலையையும் வகுத்துள்ளான்.

நம்மை ஈன்றெடுக்க அவர்கள் படும் கஷ்டநஸ்டங்கள். துன்பதுயரங்கள். அதையெல்லாம் சொல்லில் விவரிக்கமுடியாது அத்தனை இன்ப துன்பங்களுக்கிடையிலும், நம்மை ஒரு பூப்போன்று பெற்றடுத்து. ஈ எறும்பு. அண்டாமல். விடிய விடிய கண்விழித்து காத்திருந்து. உழைத்து உழைத்து ஓடாகி, நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவரும்வரையில் அவர்களின்
கஷ்டங்களை சிறுதும் பொருட்படுத்தாமல், நமக்காவே வாழ்ந்து வரும்
தியாகத்திரு உள்ளங்கள்.

நாம் வளர்ந்து ஆளானதும் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை
அவர்கள் சொல்லும் எந்த ஒரு சொல்லையும் கேட்பதற்க்கு தயாராகயில்லை,
அவர்கள் முதுமையடைந்துவிட்டால் அவர்களை ஒதுக்கி ஓரங்கட்டிவிடுகிறோம். பெயருக்காக ஊர் உலகம் பேசும் என்ற ஒன்றுக்காக அவர்களை கூடவே வைத்துள்ளோம். வயது தளர்ந்தபோது அவர்களும் ஒரு குழந்தையே! என்பதைமறந்து அவர்கள் எது சொன்னாலும் குற்றமென கருதுகிறோம்.

தாயையாவது சிலர் மதிக்கிறார்கள் ஆனால் தந்தையை, வெகு மோசமாக விமர்சிக்கிறார்கள். அது ஏனென்று புரியவில்லை, சிறுவயதுமுதல் அவர்களுக்காக உயிரை உருக்கி உழைத்து கஷ்டப்படும் அவர்களை.
தரைக்குறைவாக பேசுகிறார்கள், ஆண்மக்களாலேயே பேசப்படுகிறார்கள்.
சினிமாக்களில், சீரியல்களில், அப்பனாஅவன், அவன்கிடக்கிறான் கஞ்சப்பய, [அதைக்கண்டு இவர்களும்]அது இதுவென வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவிற்கு தந்தைகள் தாக்கப்படுகிறார்கள். நீ தந்தையாகும்போது தெரியும்.தந்தையின் பொருப்பும்
அதன் தகுதியும்.

ஒருசில தந்தைகள் செய்யும்தவறு ஒட்டுமொத்த தந்தைகளுக்கும் இழுக்கை தேடித்தருகிறது, தாய் தவறுவதில்லையென்ற நம்பிக்கை அதே நம்பிக்கையை தந்தையின்மேலும் வைக்கவேண்டும். ஏனென்றால் இருவரில்லாமல் நாமில்லை. இருவருமே நமக்காகவே வாழும் ஜீவன்கள். சிலர் தந்தையென்ற பொருப்புக்களை மறந்து குடும்பம் என்ற பொருப்பை துறந்து தன் சுயநலன்களுக்காகவும் தன் சுகங்களுக்காவும் செயல்படுவது தவறே! அதற்கு அவர்களுக்கு இறைவனிடத்தில் கேள்வியுமுண்டு தவறுக்கான தண்டனையுமுண்டு.

ஆன்மாவே!
பிறந்ததிலிருந்து உனக்காகவே வாழும் அவர்களை இடையில்வரும் சொந்ததங்களுக்காக உதறித்தள்ளிவிடாதே! இடையில் வரும் [கணவன் மனைவி காதல் நட்பு] அனைத்தும் ஒரு கண் என்றால்,
உன் மற்றொருகண் பெற்றவர்களே! அவர்களை உதாசினப்படுத்திவிட்டு, வயதாகிவிட்டது இவர்களால் வாக்கு வாதங்கள், பிரச்சனைகள் அதான் அவர்களை விட்டு தனியே வந்தாச்சி என்ற போலிக்காரணங்களெல்லாம் கூறிக்கொண்டு அலையாதே! வயதான காலத்தில் அவர்களை தனிமைப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை

அவர்கள் உனக்கு கெடுதல் செய்தபோதும் நீ அவர்களுக்கு நன்மை செய்!
ஏனென்றால் அவர்கள் உன்னைப்பெற்றெடுத்தவர்கள். இத்தனை வருடங்கள் உனக்காகவே வாழ்ந்தவர்களால் இடையில் பாசம் பங்குபோடுவதை தாங்கயிழாமல், வரும் இயலாமையே! வாக்குவாதங்கள் அதைபுரிந்து நடந்துக்கொள்.. நீ இவ்வுலகத்தைப் பார்க்க உயிரும் உடலும் தந்தவர்கள்.
காலம் மிகமிகக் குறுகியது. இன்றைய பொழுது நாளை உனக்காகவும் திரும்பும் அப்போது நீ எதைச்செய்தாயோ அதையே நீயும் காண்பாய்.
இன்று அவர்கள் உன்னால்!
நாளை நீ உன் மக்களால்!

இன்று தூவப்படும் விதை, நாளை வேராக. அல்லது இன்றே மரமாக!

இறைவனுக்கு
அடுத்தபடியாக வணக்கத்திற்குறியவர்கள் பெற்றோர்களே!
வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டுமென்பதால், அந்த ஸ்தானத்தில் பெற்றோர்களை நாம் மதிக்கவேண்டும்.

அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும். முதுமையடைந்துவிட்டால் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடாமல்.தனிமைப்படுத்திவிடாமல், கண்ணும் கருத்துமாக, மனம் நோகாதபடி நாமே பார்த்துக்கொள்ளல் வேண்டும்.
நாம் முன்போ அவர்கள் முன்போ.
நம்மால் நம் உயிர் இருக்கும்வரை அவர்களுக்கு எவ்விதத்திலும் தொந்தரவும், மனகஷ்டமும் தராமல், பேணிக்காத்திடுவோம்
இறைவன் நம் எல்லோருக்கும் அந்த பாக்கியத்தை தந்தருள்வானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக