ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு மிளகாய் ஒரு ரூபா

greenchilli_smallஊட்டி:  ஊட்டியில் ஒரு பச்சை மிளகாய் ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டியில் முட்டைக்கோஸ் பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட்,கரட், ஊட்டி அவரை, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. தும்மனட்டி, கூக்கல், தொரை, முத்தொரை, பாலாடா, பழைய ஊட்டி, பொரையரட்டி,நஞ்சநாடு, மணியட்டி உள்ளிட்ட கிராமங்களில் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இந்தக் காய்கறிகள் உள்ளூர் தேவைக்கு போக மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் அண்டை மாநிலங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஊட்டி மலைப்பகுதியில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பெய்யும் கோடை மழை காய்கறி விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும்.ஆனால் இந்த ஆண்டு கோடை மழை போதுமான அளவுபெய்யவில்லை. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் சில கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்து பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமாகின. இதனால் உற்பத்தி குறைந்து மலைக் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
இது குறித்து ஊட்டியைச் சேர்ந்த மொத்த வியாபாரி ரியாஸ் கூறுகையில்; இந்த ஆண்டு ஊட்டியில் போதியமழை இல்லை. அதனால் தண்ணீர் அதிகம் தேவைப்படும். பச்சை மிளகாய் அவரை ஆகியவற்றின் மகசூல் குறைந்துள்ளது. பச்சைமிளகாய் கிலோ ரூபா 80 முதல் ரூபா 100வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒருபச்சை மிளகாயை ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. கிராமங்களில் உள்ள பல ஏக்கர் விளை நிலங்களை அழித்து ரியல் எஸ்டேட் செய்கின்றனர். மழையும் சரியாகப் பெய்யவில்லை. இதனால் தான் காய்கறிகளின்  விலைகள் உயர்ந்துள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக