ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அத்வானிக்கு எதிராக சுவரொட்டிகள்: நெல்லையில் பரபரப்பு!


நெல்லையில் அத்வானியின் ரத யாத்திரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இன்று அவருடைய ரத யாத்திரை மதுரை வந்தடைந்தது. நாளை(28-ம்தேதி) காலை தென்காசி, செங்கோட்டை பகுதிகளுக்குச் செல்கிறார்.

இதற்கிடையில், இன்று அத்வானியின் ரதயாத்திரை மதுரை வருவதை முன்னிட்டு, அவருடைய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில்,
"ஊழல் விழிப்புணர்வு யாருக்குத் தேவை? எடியூரப்பாவுக்கா? ஊழல் ரதமே திரும்பி போ" இவண் அகில இந்திய ராகுல்காந்தி ரத்ததான கழகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜங்ஷன், டவுன், பாளை பகுதிகளில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  இந்தச் சுவரொட்டிகள் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக