ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கணவருடன் மீண்டும் ஒன்று சேர்ந்தார் வீரப்பன் மகள்!


சந்தனக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்தியாராணி, அவரது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.சென்னை பெரம்பூரை சேர்ந்த மரிய தீபக் என்பவரை வித்யாராணி காதல் திருமணம் செய்திருந்தார். கடந்த மார்ச் 30ம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


இந்நிலையில் வீரப்பனின் சமாதியில் சமய சடங்குகள் செய்ய வேண்டுமென கோரி சொந்த ஊரான சேலத்துக்கு வித்யா ராணியை அழைத்துச் சென்றுவிட்டார் முத்துலட்சுமி. அன்றிலிருந்து வித்யா ராணியுடன் தொடர்பில்லை எனவும்  எனினும், அவரது தாயார் முத்துலட்சுமி தங்களை பிரித்துவிட்டதாக மரிய தீபக் சென்னை உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார்.

எனது மனைவியை என்னிடமே ஒப்படைக்க காவற்துறை பரிந்துரைக்க வேண்டும் என தனது மனுவில் அவர் கோரிக்கை விடுத்தார். இன்று இது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது வித்யாராணியை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்

அப்போது, தான் கணவர் தீபக்குடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் என வித்யா தெரிவித்தார். வித்யாராணி மேஜரான பெண் என்பதால், அவர் கணவர் தீபக்குடன் சேர்ந்து வாழ அனுமதி அளிக்கிறோம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து கணவர் தீபக்குடன் அவர் மீண்டும் ஒன்றிணைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக