ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

துபாய்:இளம்பெண்ணை சித்திரவதைச் செய்து கொன்ற இந்தியருக்கு மரணத்தண்டனை



துபாய்,பிப்.9:வீட்டு பணிப் பெண்ணை சித்திரவதைச் செய்து மூச்சுத் திணறடித்து கொலைச் செய்த எ.எஸ் என்ற 25 வயது இந்தியருக்கு துபாய் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. நீதிபதி அல் ஸயீத் முஹம்மதின் தலைமையிலான பெஞ்ச் இத்தீர்ப்பை வெளியிட்டது.


துபாய் நகரசபை க்ளீனிக்கிற்கு விசாவை புதுப்பிக்கத் தேவையான மருத்துவ சோதனை நடத்துவதற்கு காரில் அப்பெண்னை அழைத்துச் சென்ற அவ்வீட்டின் டிரைவரான இந்தியர் அப்பெண்னை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளான். டிரைவரின் ஆசைக்கு இணங்க மறுத்த அப்பாவி பெண்ணை ஸ்கார்ஃப் துணியால் கழுத்தை இறுக்கி மூச்சுத் திணறடித்து கொலைச் செய்துள்ளான். பின்னர் அப்பெண்ணின் உடலை ஒரு பூங்காவில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளான். பின்னர் வீட்டிற்கு வந்து ஸ்பான்சரிடம் அப்பெண்ணை காணவில்லை என கூறியுள்ளான்.

சில தினங்கள் கழித்து போலீஸார் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடலை கண்டெடுத்துள்ளனர். அப்பெண்ணின் புகைப்படத்தை பத்திரிகையில் வெளியிட்டனர். இப்புகைப்படத்தை பார்த்த அப்பெண்ணின் ஸ்பான்சர் போலீசில் விபரத்தை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணை கடைசியாக அழைத்துச் சென்றது டிரைவரான இந்தியர்தான் என்பதை அறிந்து போலீஸ் அவரிடம் விசாரணை நடத்தியதில் டிரைவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக