ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள், அதிமுக கூட்டணியில் மமக-விற்கு 3 தொகுதிகள்

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


அண்மையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொய்தீன் இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்தி்ப்புக்குப் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காதர் மொய்தீன், வெற்றிகரமாக அமைந்துள்ள இந்தக் கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கூட்டணியின் வெற்றிக்கு தாங்கள் பாடுபடப் போவதாகவும் கூறினார்.

இதற்கிடையே அதிமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக