ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கையில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோம்! இவ்வருடம் மட்டும் 7000 முறைப்பாடுகள் பதிவு!!

இலங்கையில் இவ்வருடத்தில் மட்டும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் 7000 ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிததுள்ளது.
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக முறையிடுவதற்காக துரித தொலைபேசி சேவை உள்ளதாகவும் அதிகமான முறைப்பாடுகள் அதன் மூலமே ஊர்ஜிதம் செய்யப்படுவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.


சிறுவர்கள் பாலியல் தொடர்பில் துஸ்பிரயோகம் செய்யப்படுவதற்கு அரசியல் தொடர்புகளும் காரணமாக இருப்பதாக மக்கள் நம்புவதாகவும் இதன் காரணமாக சந்தேக நபர்களுக்கெதிராக முறையிடாமல் போவதற்கு காரணமென்றும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில்,
சிறுவர்கள் பாலியல் ரீதியாகவே இல்லது துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுவது அவர்களின் பெற்றொர்கள், பாதுகாவலர்கள் மற்றும் உறவுகளாலேயே என்றும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து பொலிஸாரும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக