ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எகிப்தில் இஸ்ரேலிய தூதரகம் தகர்ப்பு

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை, கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டு சுற்றுச் சுவரைத் தகர்த்தனர். இந்தக் கலவரத்தில், மூன்று பேர் பலியாகியுள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 18ம் தேதி, இஸ்ரேல்- எகிப்து எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், எகிப்து போலீசார் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனால், கோபமடைந்த எகிப்து நாட்டின் கிளர்ச்சியாளர்கள், நேற்று முன்தினம், கெய்ரோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை முற்றுகையிட்டனர்.

தூதரக அதிகாரிகளை, நாட்டை விட்டு ஓடும்படி வற்புறுத்தினர். தூதரகத்தின் சுற்றுச் சுவரை உடைத்து, உள்ளே நுழைந்த கிளர்ச்சியாளர்கள், தூதரகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை எரித்தும், கிழித்து எறிந்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
எகிப்து ராணுவத்தினரும், போலீசாரும் கவச வாகனங்களுடன் வந்து, கிளர்ச்சியாளர்களை அடித்து விரட்டினர். இந்தச் சம்பவத்தில், மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
500 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் விமானப்படை விமானம் மூலம், தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் இஸ்ரேலுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக