ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு மோடிக்கு துதி பாடும் யோக்கிய சிகாமணிகளுக்கு

/****************குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,

ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது****************/

எதுவுமே கிடையாதாம் குஜராத்துல மத்திய அரசில் அங்கோ பங்கோ கிடையாதாம்...என்ன கண்டு பிடிப்பு...இதனை சொல்ல வெட்கமா இல்லையே...காங்கிரஸ் உடன் எப்படி மோடி அங்கம் வகிப்பார்...மதவாதத்தின் மொத்த உருவம் மோடி...இந்த மோடி நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளால் வர்நிக்கப்ட்டவர்...அப்படிப்பட்ட பேர்வழி நல்ல ஆட்சி கொடுக்கிறாராம்...

ஓட்டுக்கு பணம் கிடையாதாம்...டாஸ்மாக் கிடையாதாம்...யார் சொன்னது? போலி மது பானங்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கும் முதன்மை மாநிலம் குஜராத்...போலி மது பானங்கள் காட்டாறாக ஓடும் மாநிலம் குஜராத்துதான். போலி மது குடித்து மாண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

2010 மார்ச்சு 21ஆம் தேதி ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. ஆள் இல்லாத ஒரு கார் நின்று கொண்டி ருந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை காவல்துறை சோதனையிட்டபோது, 31 பெட்டிகளில் 372 மதுபாட்டில்கள் இருந்தன.

காரின் முன்புறத்தில் டீசா எம்.எல்.ஏ., என்று எழுதப்பட்டு இருந்தது. அவர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஆவார். ஆளும் கட்சி யினர் போலி மது பான தொழிலை ஒரு சாம்ராஜ்ஜியமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சிறு அத்தாட்சி அவ்வளவுதான். ஆளும் கட்சிக்காரர்களே போலி மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருவதால் காவல்துறை கண்டு கொள்வதில்லை.


இப்பொழுது சொல்லுங்கள் மது ஒழிப்பு இருக்கிறதா குஜராத்தில்? மேலும் இந்த நீரோ மன்னன் மற்ற இன மக்களை வாழவிடாமல் கொன்று குவிப்பது மட்டுமே நல்ல ஆட்சியில் நடந்தேறுகிறது....உசார்! சோ பார்ப்பானோடு சேர்ந்து கொண்டு தமிழகத்தில் இருந்து கொண்டு மோடிக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் தோழர்களே...
 
****************

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.

-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
...
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன. *************/

தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு மோடிக்கு பிரச்சாரம் செய்யும் பேர்வழிகளுக்கு தமிழகத்தின் நலம் கண்ணிருந்தால் தெரியும்...ரெண்டும் புண்ணாக இருந்தால் தமிழக அரசு செய்யும் நலன் எப்படி தெரியும்.....பெண்களுக்கு படிப்பறிவு கொடுக்குதாம் குஜராத் அரசு....... தமிழகத்தில் பெண்களுக்கு கல்வி அறிவு மட்டும் அல்ல......வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சொத்துரிமையும் வழங்கி, மற்றும் பல அறிய திட்டங்கள் தந்து பெரியாரின் பெண்ணியத்தை நிலைநாட்டி உள்ளது...

இந்தியாவின் ஏற்றுமதி தமிழகத்தில் இருந்து 35 சதவீதம் செல்லுகிறது

இந்தியாவில் பங்கு சந்தையில் 45 சதவீத பங்குகள் தமிழகத்தில் முதலீடு...

TATA,Hyundai,Ford,Reliance,Honda மட்டும் அல்ல கோவை,திருப்பூர் மற்றும் ஈரோட்டில் ஒரு துறை..சேலம் இரும்பு...ஓசூர் மருந்து மற்று இதர தொழில்கள்...இவை அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு நடைபெற்று வருகிறது....மேலும் வளர்ச்சி அடைய பணிகள் மேற்கொண்டுள்ளது நம் தமிழக அரசு......இங்கு இந்த தொழில் பெருக்கத்தை மேலும் வலுப்படுத்த முயன்றால் விளைநிலம் போகும் என்று கூச்சல் போடுவார்கள்...குஜரத்தில் மோடி தத்தி முத்தி.....ஒரு சில தொழிற்ச்சாலை கொண்டுவந்தால் அது வளர்ச்சிக்கான முயர்ச்சியாம்......தமிழா இன உணர்வு கொள்...தமிழனாக இரு...
 
நல்லாட்சியோ ..நாடுமாறி ஆட்சியோ செய்யும்.. மோடி மஸ்த்தான் பற்றி மேலும் சில துளிகள்...

குஜராத்தில் அரச பயங்கரவாதம் தலைதூக்கி ஆயிரக்கணக்கான முசுலிம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கலவரங்கள் மீதான விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை.... உச்சநீதி மன்றமே புலனாய்வுக் குழு ஒன்றை நியமித்து விசாரிக்க ஆணை ஒன்றினைப் பிறப்பித்தது.

புலன் விசாரணைக் குழுவின் விசாரணையில் பல மோசடிகள் அம்பலமாயின. அதன் விளைவு குஜராத் மாநில காவல்துறைத் துணைத் தலைவர் வன்ஜாரா உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

இதைவிட உலகம் இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு பூகம்பப் பொய் ஒன்று இருக்கிறது. அந்த வெளிப்படையான (?) மோடியின் நிருவாகத்தின்மீது காரித்தான் உமிழ் வார்கள்.

கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட சிலரிடம் ஆயுதங்கள் இருந்தன என்றும், அவை பறிமுதல் செய்யப்பட்டன என்றும், அதற்குச் சாட்சியாக கோத்ரா அருகில் உள்ள பம்ப்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ஸ்மஷான் சாலையில் வாழும் மாலாஜி ஓடாஜி என்ற மார்வாடி என்பவர் சேர்க்கப்பட்டு இருந்தார்.

சாட்சியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அந்தச் சாட்சிக்கு நீதிமன்றத்தால் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவரோ சாட்சி சொல்ல வரவில்லை. அவர் எப்படி வருவார்? கோத்ரா நிகழ்வுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்தவர் ஆயிற்றே அவர்! அவர் எப்படி சாட்சிக் கூண்டு ஏறுவார்?

ஏழாண்டுகளுக்கு முன் செத்தவரை சாட்சியாகப் பதிவு செய்த நரேந்திரமோடிஆட்சியைப் போல வெளிப்படை யான நிருவாகத்தை எங்குப் போய்த் தேட முடியும்?

முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டும் முப்புரிக் கூட்டம் எந்த அளவுக்கும் பொய்ச் சொல்லத் தயங்காதே!
 
மேலே சொன்ன மோடிமஸ்தான் ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்று நினைக்கும் கூட்டம்......பார்ப்பன அம்மையாரை தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறது ....உசார் தமிழர்களே...நிதானம் தேவை....சும்மா குடும்பம்...சொத்து,சொத்தது என்று சொல்லுவதை நம்பி மோசம் போகாதீர்கள்.....இன்னும் சொல்லப்போனால் குஜராத்தில் வேலை பார்க்கும் தமிழக பார்ப்பனர்கள் கூட அங்கு வீடு வாங்கி வசிக்காமல் தமிழகம் நோக்கி வீறுநடை போடுகிறார்கள்...நல்லாட்சி என்றால் அங்கேயே இருக்கவேண்டியது தானே......ஏன்னா மோடியே சென்னையில் வந்துதான் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறார் ..அய்யா வாங்க...அம்மா வாங்க  தொழில் தொடங்க..என்று.......தமிழ்நாட்டை பார்த்து அதில் ஒரு 15 சதவீதம் ஆவது குஜராத்தில் தொழில் வளர்ச்சி தொடக்கி தன் மீது படிந்துள்ள இந்துத்துவ கரையை மறைத்து...பார் பார் இதோ நானும் நல்லாட்சி செய்கிறேன் என்று  மோடி மஸ்தான் மார்தட்ட படும் பாடு...இங்கு உள்ள கலைஞர் எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள யோக்கிய சிகாமணிகளுக்கு கண்ணை மறைக்கிறது..........திராவிடர் இன உணர்வு கொண்ட தமிழா விழித்துகொள்....
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக